சுத்த வெளி காணாமல், சுருண்டு வீழும் நிழல்தான்
எல்லாம் பொல்லாத வினை சேர்ந்த, புதைகுழிதான் வாழ்க்கை
இங்கு சேற்றிலே, புதைந்த மன்ம் தெய்வமாவதில்லை.
ஒளியூற்றே, உள்ளொளி இருப்பு என்றால், உலகம், தான் ஏது?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment