அமிழ்தினும் இனியது என் அருந் தமிழ் ஞானம்.
மனதில் படுவதெல்லாம் மாயத் தோற்றமே.
காய்கின்ற பாலையின், காட்சி மயக்கமே,
இது சாட்சி புருஷனாய் நானிருக்க,
இந்தக் காட்சி மயக்கம், என் கனவிலும் வருவதில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment